நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவ ருமான பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வராக உள்ளார். பாஜக வின் நெருங்கிய கூட்டாளியான பவன் கல்யாண், திருப்பதி லட்டு பிரச்சனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், சனாதன தர்மத்திற்காக தனி வாரியம் அமைக்கப்படும் என்றும், மாட்டு கொழுப்பால் திருப்பதி கோவி லின் புனிதம் கெட்டுவிட்டதால் ஏழுமலை யனிடம் மன்னிப்பு கேட்க 11 நாள் விர தம் இருக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் 5 ஆண்டுகளுக்குப் முன்பு, அதாவது பாஜகவிடம் கூட்டணி வைக் காத காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண், “மாட்டிறைச்சி சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது. சுவாமி விவேகானந்தர் கூட இதைக் கூறினார். அதனால் மாட்டி றைச்சி சாப்பிடுவதை அரசியல் ஆக்க வேண்டாம்” எனக் கூறினார். அதே பவன் கல்யாண் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆன பின்பு மாட்டு கொழுப்பால் திருப்பதி கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது. இத னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியுள்ளார். பாஜகவில் இணைந்தால் 6 என்ற எண் 9 ஆக மாறிவிடும் போல.
“மாநிலத்திற்கு ஏற்ப பாலில் உள்ள சத்துக்கள் வேறுபாடு இருக்கும்”
லட்டு நெய் பரிசோதனை முடிவுகளில் முரண்பாடு
சந்திரபாபு குற் றச்சாட்டை முன்வைத்த பின்பு திருப்பதி யில் லட்டுக்காக சேகரித்து வைக் கப்பட்டு இருந்த நெய் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஆய்வ கத்தில் சோதனை செய்யப்பட்டதாக வும், அந்த சோதனை முடிவில் மாடு மற்றும் பன்றி கொழுப்பு, மீன் எண் ணெய், சமையல் எண்ணெய் படிவு கள் இருந்ததாக கூறப்படுள்ளது. ஆனால் இந்த பரிசோதனை முடிவு கள் அனைத்தும் முரண்பாடாக இருப்பதாக பெயரிட விரும்பாத உணவு துறை ஆய்வக பொறியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “உணவு பொருட்களை ஆய்வு செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால் திருப்பதி நெய் விவகாரத்தில் “எஸ்” குறியீடு என்ற பரிசோதனை மட்டுமே செய்யப்பட் டுள்ளது. இந்த முடிவுகளில் மாடு - பன்றி கொழுப்புகள் நிச்சயம் கலந்து இருக்கலாம் உறுதியாக சொல்ல முடியாது. இது போன்ற விவ காரங்களில் கொழுப்பு அமில சோதனை மற்றும் கார்பன் ஐசோ டோப் சோதனை மூலம் தான் உறுதி யாக சொல்ல முடியும். ஆனால் இந்த சோதனையை செய்யாமல் நெய்யில் மாட்டு கொழுப்பு இருக்கி றது என்று சொல்வது முற்றிலும் அபத்தமானது. மாநிலத்திற்கு ஏற்ப பால்களில் உள்ள சத்துக்கள் வேறு பாடு இருக்கும். ஏனென்றால் மாடு உண்ணும் உணவும், வாழும் இருப்பி டத்திற்கு ஏற்ற வகையில் பாலின் தரம் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள மாடுகள் அதிகளவில் புண்ணாக்கு மற்றும் பருத்தி விதைகளை உண் ணும். எனவே அந்த பால் மூலம் நெய்யில் சர்வசாதாரண எண்ணெய் வித்துக்களின் தடங்கள் இருக்கத் தான் செய்யும். அதேபோல் ஊட்டச் சத்து குறைவாக இருந்தாலோ, பாலில் கொழுப்பு நீக்கபட்டு இருந்தா லும் “எஸ்” முடிவுகள் இருக்கத்தான் செய்யும். எனவே எதிர்வரும் சோத னைகள் மூலமாக தான் இந்த விவகா ரத்தின் உண்மை நிலை தெரியும்” என அவர் கூறினார்.